வாழ்வதனை வசந்தமாக்க வந்த வைரமும் – நீயே !
வானமத்தின் கவலைகளை தீர்த்து வைக்கும் தாயவளும் – நீயே !
பசுமைதனை உலகிற்கு தருபவளும் நீயே !
பச்சிளம் பாலகர்களின் பாலாக தோன்றுவதும் நீயே !
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் – ஓராயிரம்
சிறப்புகள் உண்டு என்பதை மனித இனமும் அறியும் !
ஒவ்வொரு சிறப்பிலும் முதலிடம் உனக்கே !
ஒன்றல்ல இரண்டல்ல உன் பெருமை கூற !
ஐம்பூதம் என்று உனை ஞாலமதில் கூறினாலும்
ஐயமில்லா செயலதனை ஆற்றுவதும் நீயே !
நீர் என்று பெயர் பெற்று நீ இருப்பதாலும்
நீல நிறக்கடலிலே சேர்ந்திருப்பதாலும்
இவ்வுலகில் உனை எண்ண மனிதனுக்கு நேரமது இல்லை
உன் நினைவு கொள்வதற்கு காலமிது தானே !
பல தினங்கள் இவுலகில் கொண்டாடினாலும்
பல லட்சம் மக்கள் இதை அறிந்திருந்தாலும்
இது தினத்தில் உன் பெருமைதனை கூறுவதில்
இன்பமதை பெறுகின்றேன் அகமகிழ்ந்து நானும் !
நன்றி
யோ.சதீஸ்க்கா