பிறப்பதற்கும், இறப்பதற்கு
உண்பதற்கும், உடுப்பதற்கும்
உழவுக்கும், உணவுக்கும் – தேவை தண்ணீர்
அதை கண்ணீருடன் தேட வைக்காதே
மனிதா, நீரின்றி நீ இல்லை
மனிதா, நீரின்றி உன் உயிரில்லை
உன் தாகம் தீர்க்க ஊற்று நீராய்,
உன் பாவம் போக்க கங்கை நீராய்,
உன் அழுக்கு நீக்க ஓடை நீராய்,
உன் உணவு பெருக மழை நீராய்,
உன் உடை வெளுக்க குழாய் நீராய்,
உன் சாம்பல் கரைக்க கடல் நீராய்,
உன் அருகில் உவப்புடன் கிடைக்கும் நீர் வளங்கள்
எத்தனை, எத்தனை
இறைவன் எமக்கு குளிர் நீராய், வெந்நீராய்,
இனிதான பல ஊற்றுக்கள் தந்துள்ளார்
வரண்ட இடமெல்லாம் குடிநீர் பஞ்சம்
வளமான இடமெல்லாம் வளமாக்குவதோ கொஞ்சம்
இதனை இஞ்சளவும் புரிந்திடாமல்
இடைவிடாது வீண் விரயமாக்குவதேன்?
ஐம்பூதங்களில் ஒன்றான தண்ணீரை
ஐயமின்றி வீணாக்காதே!
ஐஸ்வரியம் சேர்ப்பதற்க்காய்; பொது நீரை சுயநலமாக்காதே!
ஐயையோ தண்ணீர், தண்ணீரென்று அழுவாய் – ஏனென்றால்
ஐயமேயில்லை அடுத்த நூற்றாண்டில் ஊற்றே இல்லை