கண்ணியத்தை போற்றும் தை பொங்கல்

உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தங்கள் புத்தாண்டின் தொடக்கமாக தைப்பொங்கலை ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் கொண்டாடுகிறார்கள். இந்து நாட்காட்டியின்படி, ஜனவரி மாதம் ‘தை’ என்று அழைக்கப்படுகிறது.

தைப்பொங்கல் இந்து புத்தாண்டின் விடியலாக ‘அறுவடை திருவிழா’ என்றும் அழைக்கப்படுகிறது. தைப்பொங்கல் திருநாளில், சூரியன், பூமி, மழை, வளமான விளைச்சலுக்கு உதவிய மாடுகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம், இந்துக்கள் அபரிமிதமான விளைச்சலை அறுவடை செய்ய உதவிய சுற்றுச்சூழலுக்கு மரியாதை செலுத்துகிறார்கள் மற்றும் ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக தங்கள் அயலவர்களுக்கு உணவு மற்றும் பானங்களை கொண்டு உபசரிக்கிறார்கள் .

மரியாதை என்பது பிராண்டிக்ஸின் மதிப்பு கோட்பாடுகளில்  ஒன்றாகும், மேலும் பிராண்டிக்ஸின் முற்றத்தில் விழித்தெழுந்த மக்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தீர்வுகளை உலகிற்கு வழங்குவதற்கு பிராண்டிக்ஸ் மதிப்புகள் பெரும் உதவியாக அமைகின்றன. பிறரை மதிப்பதன் மூலம் ஒருவன் தன் மீது மரியாதையை அடைகிறான்.

தைப்பொங்கல் நாளில், அரிசி, பச்சைப்பயறு, வெல்லம், பால் மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு சுவையான பொங்கல் தயாரிக்கப்படுகிறது. மேலும், முற்றத்தில் கோலம் இடுவது தைப்பொங்கல் நாளில் நடைபெறும் ஒரு செயலாகும். காலையில் எழுந்ததும் இந்துப் பெண்கள், சுத்தம் செய்யப்பட்ட வீடுகளின் முன் அரிசி மாவில் கோலம் வரைவார்கள். இந்த கோல வடிவங்களுக்கு அரிசி மாவைப் பயன்படுத்துவதன் நோக்கம் எறும்புகள் மற்றும் பறவைகள் போன்ற விலங்குகளை சாப்பிட அனுமதிப்பதாகும். இத்தகைய நல்ல எண்ணங்களுடனும், விழுமியங்களுடனும் இந்துக்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்.

தமக்கு அறுவடை வழங்கியமைக்காக சூழலுக்கு கண்ணியத்துடன் நன்றி தெரிவிக்கும் தைத் திருநாளில், அனைத்து இந்துக்களுக்கும் வளமான தைப்பொங்கல் திருநாளாக அமைய வாழ்த்துக்கள்!

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *