உனக்குத் தயவே இல்லை

தண்ணீர் உனக்குத்

தயவே இல்லையென்று

கண்ணீர் உகுந்தபடி

கதறிடும் மக்கள் கூட்டம் !

அப்பாதமாய் நீ

அடித்து நொறுக்குவதை

வெள்ளமென்றே மனிதர்

வெறுத்தே ஒதுக்கிடுவர் !

கோடையிலே நீ

கொஞ்சமும் இரக்கமின்றி

பூமிக்குள் ஒளிந்து நீ

புரட்டுகிறாய் மக்களையே !

எல்லோர்க்கும் எளியவனாய்

எப்பொழுதும் நீ இருந்திட்டாய்

தெய்வமாய் என்றுமுன்னை

சீராட்டியே மகிழ்ந்திடுவோம்

K .அபிநயன்

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *