"புதிய சந்ததியினருக்கு இந்த நாட்டின் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்"

இம்முறை வியமன் TV இல் “நீங்கள் என்னை அறிந்தால்” நிகழ்ச்சியின் மூலம் உங்கள் முன் தோன்றுவது பிராண்டிக்ஸ் பாஸ்ட் பெஷன் குழுமத்தின், குழும மனிதவள முகாமையாளர் திரு. ஜினேந்திற பத்மசிரி.

“இந்நாள் வரை வாழ்வின் இலக்குகளை அடைந்தவர், எதிர்காலத்தில் புதிய இலக்குகளை அடையத் தயாராக இருப்பவர், குழு மனப்பான்மையுடன் செயல்படுபவர், மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பாடுபடுபவர் என ஜினேந்திரவை அடையாளப்படுத்தலாம்.

எனது பள்ளிப் பருவத்தை 2000 களில் தொடக்கத்தில் உயர்கல்வியை முடித்தேன். எனது ஆரம்ப கல்வியை ஹெட்டிபொல மத்திய கல்லூரியில் கற்றேன். எனது முன்மாதிரி பாத்திரம் எனது தந்தை. அவரிடமிருந்து பெற்ற உத்வேகமும், வழிகாட்டுதலும், தலைமைப் பண்பும் எனக்கு பெரிதும் உதவின.

நான் வெவ்வேறு கோணங்களில் வாசிப்பதில் தேர்ச்சி பெற முயற்சிக்கிறேன். எனது வீட்டில் ஒரு சிறிய நூலகம் நடத்தி வருகிறேன். இன்றைக்கும் புத்தகங்களில் உள்ள ரசனையையும், மறைந்திருக்கும் விஷயங்களையும் வாழ்க்கையில் முன்னேறவும், எனது அணியின் அறிவை வளர்க்கவும் பயன்படுத்துகிறேன். நான் பிராண்டிக்ஸில் 15 வருடங்களாக இருக்கிறேன். நான் பிராண்டிக்ஸ் பங்களாதேஷில் மனித வள முகாமையாளராக சுமார் 7 ஆண்டுகள் பணிபுரிந்தேன்.

அடுத்த தலைமுறை சிந்திக்கும் விதமும் அவர்களின் அணுகுமுறையும் முற்றிலும் வேறுபட்டவை. புதிய சந்ததியினரால்  மட்டுமே இந்த நாட்டை மாற்ற முடியும். பழைய தலைமுறையினராகிய நாம் அவர்களை வழிநடத்தி, பயிற்சியளித்து, எமது கடந்தகால தவறான அனுபவங்களிலிருந்து அறிவை வழங்குவதன் மூலம் முழு இலங்கையையும் மாற்றியமைத்து அவர்களை சிறந்த இடத்திற்கு கொண்டு வர முடியும் என நான் நம்புகிறேன்.”

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *