நமது உள ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பேணுவோம்.

நாம் எமது உள ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பராமரிக்க என்ன செய்யலாம்? பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்று உளவியலாளர் ருவானி ஜயலத், இன்று தனது விழித்தெழுந்த வாழ்க்கை/ “பிபிதுனு திவியக்” நிகழ்ச்சியின்  ஊடாக இது பற்றிப் கலந்துரையாடுகிறார்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், நமது மன ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பராமரிக்க நான்கு விஷயங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். முதலாவதாக, எந்த ஒரு பணியிலும் ஈடுபடும் அளவுக்கு உடல் மற்றும் மன வலிமையுடன் இருத்தல் வேண்டும். இரண்டாவது உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் கற்றுக்கொள்வது ஆகும். நம்மிடம் பலவிதமான உணர்வுகள் உள்ளன. அவை என்னவென்று புரிந்துகொண்டு கற்றுக்கொள்வதன் மூலம், நமது மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தலாம்.

மூன்றாவது விஷயத்தைப் பற்றி அவர் விரிவாகப் பேசினார், ” நாம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைச் செய்வதன் மூலமும், நமது அடிப்படைத் தேவைகளுக்கு முதலிடம் கொடுப்பதன் மூலமும் நமது மன ஆரோக்கியத்தைப் பலப்படுத்தலாம். அதாவது, நமது அடிப்படைத் தேவைகளான போதுமான தண்ணீர் குடிப்பது, சத்தான உணவு உண்பது, போதுமான தூக்கம் போன்றவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்.”

மேலும் அவரது கருத்துப்படி, நமது மன ஆரோக்கியத்தை வலுப்படுத்த நாம் முழுமைப்படுத்தவேண்டிய அடுத்த விஷயம், நமது தேவைகள் மற்றும் மதிப்புகள் என்ன என்பதை அடையாளம் கண்டு, அவற்றை எம்முடன் இருப்பவர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் முழுமைப்படுத்துவதன் மூலம், நமது உள ஆரோக்கியத்தை மிகச் சிறந்த அளவில் பராமரிக்க முடியும். இது நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.