நான் செய்யும் வேலையினை, செய்யும் நேரத்திற்கு சரியாகச் செய்கிறேன்

இம்முறை வியமன் தொலைக்காட்சியின் “ஹந்துணாகதத்தொத் ஒப மா” / “நீங்கள் என்னை அறிந்துகொண்டால்”  நிகழ்ச்சியின் ஊடாக , பிரண்டிக்ஸ் இன்டிமேட்டின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. உபுல் உபயவன்ச, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இணைந்தார். அவர் கிராமத்திலிருந்து நகரம் நோக்கிய பயணத்தை நினைவு கூர்ந்து தனது உரையாடலைத் தொடங்கினார்.

“கிராமத்து பாடசாலையிலிருந்து புலமைப்பரிசில் பரீட்ச்சையில் சித்தியடைந்து கொழும்புக்கு வந்தேன்.அது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது.முதலில் கொழும்புக்கு வரும்போது மிகவும் பதட்டமாக இருந்தது.அத்துடன் கொழும்புக்கு வரும்போது மிகவும் பயமாக இருந்தது.பின்னர், காலப்போக்கில் நான் அதற்க்கு பழகிவிட்டேன்.”

“நான் பாடசாலை காலத்தில், தனிமையில் இருத்த காலம் எனக்கு உந்து சக்தியாக இருந்தது, எனக்கு அதிகபட்ச சுதந்திரம் இருந்தது, ஆனால் நான் என் அம்மா மற்றும் அப்பாவின் கட்டமைப்பிற்குள் வேலை செய்ததால், தனியாக எப்படி வாழ்வது என்பதற்கு நல்ல அடித்தளம் அமைந்தது.” வெற்றிகரமான வாழ்க்கைப் பயணத்திற்கு எப்படி அடித்தளம் அமைத்தார் என்பதை நம்முடன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

“நான் மிகவும் சாதாரணமான நபர். நான் நிறைய பேரை நம்புகிறேன். மேலும் யார் வேண்டுமானாலும் என்னை நம்பலாம். அது எனக்கு பல காரியங்களுக்கு உதவியது.” அவர் அடக்கமானவர் என்பதும் அவரது வார்த்தைகளில் இருந்தே தெரிய வந்தது.

ஒரு மனிதன் வெற்றிபெற பல அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும். அவர் தனது அர்ப்பணிப்பையும் நோக்கத்தினையும் எங்களுடன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார். “நான் ஏதாவது செய்ய முடிவு செய்தால், என்னால் முடிந்தவரை அர்ப்பணிப்புடன் பங்களிப்பேன். எப்போதும் என்னால் முடிந்ததைச் செய்து அதன் விளைவை பார்ப்பது எனது எதிர்பார்ப்பு ஆகும். நான் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் நபர் அல்ல. ஆனால் நான் செய்யும் வேலையினை, செய்யும் நேரத்திற்கு சரியாகச் செய்கிறேன். அதுவே என் விருப்பம் ஆகும்.”

“நான் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை, வேலைக்குச் செல்லும் போது எனக்கு சலிப்பு ஏற்பட்டதில்லை. நான் செய்வதை நேசிப்பது எனது பயணத்திற்கு பெரிதும் உதவியது. நான் லொறிகளுக்கு சரக்குகளை ஏற்றி இருக்கிறேன், ஷிஃப்மண்டுகளை அனுப்பி இருக்கிறேன். இவை என்னுள் தானாகவே இருந்து வரும், மற்றும் பேரார்வத்துடனும் செய்ய்யும் விடயங்கள் ஆகும்.” சோம்பேறியாக இல்லாமல் விருப்பத்துடன் செய்வதே எவ்வளவு முக்கியம் என்பதை அவருடைய பேச்சும் நமக்கு உணர்த்தியது.

“நீங்கள் எதைச் செய்தாலும் அதை அன்புடனும் விருப்பத்துடனும் செய்யுங்கள். நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த சிக்கலான சமூகத்தில் நீங்கள் யார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் மகிழ்ச்சியாகவும் எளிதாகவும் வாழலாம்.” இறுதியாக, அவர் தனது உரையில் பிரண்டிக்ஸ் சமூகத்திற்கு மட்டுமல்ல, அனைவருக்கும் முக்கியமான ஒரு செய்தியை வழங்கினார்.